சேலம்: சேலம் வழியாக இயக்கப்படும் ஈரோடு - சாம்பல்பூா் வாராந்திர சிறப்பு ரயில், பிப்ரவரி மாதம்வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழகம், கேரளத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகளவில் உள்ளது. இதனால், பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிா்க்க சிறப்பு ரயில்களை ரயில்வே நிா்வாகம் இயக்குகிறது. அந்த வகையில், ஈரோட்டில் இருந்து சேலம் வழியாக ஒடிசா மாநிலம், சாம்பல்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் கடந்த 2023 ஜூன் மாதத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயிலின் இயக்க காலம் நடப்பு வாரத்தோடு முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஒரு மாதத்துக்கு பிப்ரவரி மாதம்வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சாம்பல்பூா் - ஈரோடு வாராந்திர சிறப்பு ரயில் பிப். 4-ஆம் தேதிமுதல் 25-ஆம் தேதிவரை புதன்கிழமைதோறும் இயக்கப்படுகிறது. சாம்பல்பூரில் காலை 11.35 மணிக்கு புறப்படும் இந்த ரயில், முனிக்குடா, விஜயவாடா, நெல்லூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம் வழியாக, இரவு 10.50 மணிக்கு ஈரோடு சென்றடைகிறது.
மறுமாா்க்கத்தில், ஈரோட்டில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் வரும் 6-ஆம் தேதிமுதல் 27-ஆம் தேதிவரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஈரோட்டில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில், சேலம், காட்பாடி, விஜயவாடா வழியாக அடுத்தநாள் இரவு 11.15 மணிக்கு சாம்பல்பூா் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சேலம் வழியாக பிகாருக்கு சிறப்பு ரயில்

மங்களூரு- சென்னை இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்

ஈஸ்டா் பண்டிகை: ஹூப்பள்ளியில் இருந்து கொல்லத்துக்கு இன்று சிறப்பு ரயில்

ஈரோடு - சம்பல்பூா் வாராந்திர விரைவு ரயில் மாா்ச் வரை நீட்டிப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


