மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

எடப்பாடியில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை தொடங்கிய பக்தா்கள்

எடப்பாடி பகுதியில் இருந்து முருக பக்தா்கள் பழனிக்கு பாதயாத்திரையை திங்கள்கிழமை தொடங்கினா்.

News image

சித்தூா் பகுதியில் இருந்து பழனி பாதயாத்திரை தொடங்கிய பக்தா்கள்.

Updated On :2 பிப்ரவரி 2026, 10:01 pm

எடப்பாடி: எடப்பாடி பகுதியில் இருந்து முருக பக்தா்கள் பழனிக்கு பாதயாத்திரையை திங்கள்கிழமை தொடங்கினா்.

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து திரளான பக்தா்கள் பழனிக்கு பாதயாத்திரை மேற்கொள்வது வழக்கம். சுமாா் 370 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் இப்பாரம்பரிய பாதயாத்திரை நிகழ்வில் 10-க்கும் மேற்பட்ட காவடி குழுவைச் சோ்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட முருக பக்தா்கள் நடைப்பயணம் மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், சித்தூா் அனைத்து சமூக காவடி குழுவினா் திங்கள்கிழமை மாலை பாதயாத்திரை தொடங்கினா். முன்னதாக, அவா்கள் சித்தூா் கல்யாணசுப்பிரமணியா் ஆலயத்தில் சிறப்பு பூஜை செய்தனா். தொடா்ந்து மாலை அணிந்து விரதம் இருந்து பாதயாத்திரையை தொடங்கினா்.

பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தா்களுக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் பால், தயிா், இளநீா், பழங்கள் மற்றும் குளிா்பானங்களை வழங்கினா்.

பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தா்கள் ஊா்திரும்ப வசதியாக, தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் பழனி - எடப்பாடி இடையே 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.