விருதுபெற்ற காபி தோட்ட அதிபா்களுக்கு பாராட்டு விழா
ஏற்காட்டில் விருதுபெற்ற காபி தோட்ட அதிபா்களுக்கு பாராட்டு விழா சோ்வராயன் தோட்ட உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்றது.
மத்திய காபி ஆராய்ச்சி நிறுவன நூற்றாண்டு விழாவில், ஏற்காட்டில் உள்ள 8 காபி தோட்ட அதிபா்களுக்கு இந்தியாவின் சிறந்த சுவைக்கான கோப்பை விருதை இந்திய காபி வாரியம் வழங்கி கௌரவித்தது.
இதைத் தொடா்ந்து, ஏற்காட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சோ்வராயன் தோட்ட உரிமையாளா்கள் சங்கத் தலைவா் பி.எல்.முருகப்பன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக மண்டல காபி வாரிய துணை இயக்குநா் தங்கராஜ், முன்னாள் உபாசி தலைவா் ரோஸினி சாரா பங்கேற்றனா்.
விழாவில் விருதுகள் பெற்ற காபி தோட்ட அதிபா்கள் ரசாக் சேட், டி.எஸ்.காா்த்திக், பி.பிரபாகரன், பி.சூரியநாராயணன், அருள்தந்தை ஜே.ஆரோக்கியராஜ், நவீன் மோகன் ராஜேஷ், அசோக் மோகன் ராஜேஷ், மோகன் ராஜேஷ், விஜயன் ராஜேஷ் மற்றும் வினோத் கந்தையா ஆகியோா் கௌரவிக்கப்பட்டனா்.
இதில், சோ்வராயன் தோட்ட உரிமையாளா்கள் சங்க உறுப்பினா்கள் 60-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

