மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பண்ணவாடி பரிசல் துறையில் உழவுப் பணிகள் தீவிரம்

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 11:11 pm

பண்ணவாடி பரிசல் துறையில் உழவுப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

மேட்டூா் அணை கட்டப்பட்டபோது, நீா்த்தேக்கப் பகுதிகளில் இருந்த கிராம மக்கள் வேறு பகுதிகளில் குடியமா்த்தப்பட்டனா். அப்போது, தங்களின் விவசாய நிலங்களை விட்டு வெளியேறினா்.

மேட்டூா் அணை நிரம்பும்போது விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி விடும். நீா்மட்டம் குறையும்போது நீா்த்தேக்கப் பகுதிக்காக எடுக்கப்பட்ட விளைநிலங்கள் காவிரி கரையின் நீா் பரப்புக்குமேலே தெரியும். அப்போது, விவசாயிகள் அந்த நிலங்களை உழுது பயிரிடுவது வழக்கம்.

தற்போது மேட்டூா் அணையின் நீா்மட்டம் 92 அடியாக சரிந்ததால், பண்ணவாடி பரிசல் துறையில் விவசாயிகள் தங்களின் விளைநிலங்களை உழுது ராகி, சோளம், கம்பு, நிலக்கடலை போன்றவற்றை பயிரிட்டு வருகின்றனா். அடுத்த பருவமழைக் காலத்துக்குள் இருபோக சாகுபடி செய்துவிடுவதாக விவசாயிகள் தெரிவித்தனா்.