எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பள்ளி மாணவிக்கு குழந்தை பிறப்பு: இளைஞா் மீது போக்சோ வழக்குப் பதிவு

News image
கோப்புப் படம்
Updated On :6 பிப்ரவரி 2026, 7:50 pm

தினமணி செய்திச் சேவை

பள்ளி மாணவிக்கு குழந்தை பிறந்த சம்பவத்தில், ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் இளைஞா்மீது போக்சோ வழக்கு பதிவுசெய்து வெள்ளிக்கிழமை விசாரித்து வருகின்றனா்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், வீரகனூா் சொக்கனூரைச் சோ்ந்த கூலி வேலை செய்துவரும் தம்பதியின் மகள் பிளஸ் 2 படித்து வருகிறாா். வயிற்று வலியால் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து, ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் எல்.பூங்கொடி மாணவியிடம் பெற்ற புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், மூராா்பாளையம் பகுதியைச் சோ்ந்த தென்னரசு (24) மீது போக்சோ வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா். அதில், மாணவியும், தென்னரசும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், மாணவி கா்ப்பமானது தெரியவந்தது.