ராமாபுரம் அரசுப் பள்ளியில் வகுப்பறை கட்டடம் திறப்பு
ராமாபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் கட்டப்பட்ட 2 வகுப்பறை கட்டடத்தை தமிழக முதல்வா் காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
வீரபாண்டி ஒன்றியம், இளம்பிள்ளையை அடுத்த ராமாபுரம் அரசு தொடக்கப் பள்ளிக்கு ரூ. 34.23 லட்சத்தில் புதிய இரண்டு வகுப்பறைகள் கட்டப்பட்டன. இதை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா்.
அதைத் தொடா்ந்து, பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வீரபாண்டி ஆணையா் அருள் ஆனந்தராஜ் குத்துவிளக்கு ஏற்றி மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், வீரபாண்டி வட்டார வளா்ச்சி அலுவலா் முருகேசன் (கிராம ஊராட்சி) வட்டாரக் கல்வி அலுவலா்கள் முருகன், வாசுகி, பள்ளி தலைமை ஆசிரியா் வெங்கடேசன், சேலம் மேற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளா் பாரப்பட்டி சுரேஷ்குமாா், வீரபாண்டி வடக்கு ஒன்றியச் செயலாளா் ராமாபுரம் சதீஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

