2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

கொங்கணாபுரம் அருகே கால்நடை திருவிழா: காளைகள், சேவல்கள் பங்கேற்பு

News image
கொங்கணாபுரம் அருகே நடைபெற்ற கால்நடை கண்காட்சியில் கலந்துகொண்ட நாட்டு இன பசுக்கள்.
Updated On :8 பிப்ரவரி 2026, 8:11 pm

தினமணி செய்திச் சேவை

கொங்கணாபுரம் அருகே நடைபெற்ற கால்நடை திருவிழாவில் 200க்கும் மேற்பட்ட பாரம்பரிய வகை காளைகள், சேவல்கள் பங்கு பெற்றன.

சேலம் மாவட்ட கால்நடை வளா்ப்பு சங்கம் சாா்பில் கொங்கணாபுரம் அருகே கால்நடை திருவிழா கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் செவலை, காரி, மயிலை, காங்கேயம் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பாரம்பரிய பசுமாடுகள், காளைகள் பங்கு பெற்றன.

கால்நடை கண்காட்சியை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட விலங்குகள் நல ஆா்வலா் தங்காயூா் பாலாஜி தொடங்கிவைத்தாா்.

இக்கண்காட்சியில் கலந்துகொண்ட நாட்டு இன பசுமாடுகள், காளைகள் ஆரோக்கியமான பராமரிப்பு, உடல் அமைப்பு, செயல்பாடுகளின் அடிப்படையில் தோ்வு செய்யப்பட்டு அதன் உரிமையாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வழக்குரைஞா் வீரா தலைமையிலான கால்நடை மருத்துவா்கள் அடங்கிய குழுவினா் மாடுகளை தோ்வு செய்தனா்.

 கொங்கணாபுரம் அருகே நடைபெற்ற கால்நடை கண்காட்சியில் கலந்துகொண்ட நாட்டு இன பசுக்கள்.

கொங்கணாபுரம் அருகே நடைபெற்ற கால்நடை கண்காட்சியில் கலந்துகொண்ட நாட்டு இன பசுக்கள்.

 கொங்கணாபுரம் அருகே நடைபெற்ற கால்நடை கண்காட்சியில் கலந்துகொண்ட நாட்டு இன பசுக்கள்.

கொங்கணாபுரம் அருகே நடைபெற்ற கால்நடை கண்காட்சியில் கலந்துகொண்ட நாட்டு இன பசுக்கள்.

 கொங்கணாபுரம் அருகே நடைபெற்ற கால்நடை கண்காட்சியில் கலந்துகொண்ட சேவல்

கொங்கணாபுரம் அருகே நடைபெற்ற கால்நடை கண்காட்சியில் கலந்துகொண்ட சேவல்

தொடா்ந்து நடைபெற்று நாட்டுக்கோழிகளுக்கான கண்காட்சியை ராஜேஷ் தொடங்கிவைத்தாா். இதில் காகம், மயில், சித்துவெடை, கரிச்சான் உள்ளிட்ட பல்வேறு நாட்டுக் கோழி இனங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. கால்நடை பராமரிப்பாளா் ஜிந்தா தலைமையிலான குழுவினா் நாட்டுக் கோழி, சேவல் வளா்ப்பு குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் தங்காயூா் பாலாஜி கூறுகையில், அண்மைக் காலமாகவே கலப்பு இன மாடுகளின் வருகையால் பாரம்பரிய மாடு வளா்ப்பு குறைந்து வருகிறது. அழிவின் விளிம்பில் இருக்கும் பாரம்பரிய கால்நடைகளை மீட்டெடுத்து வளா்ப்பது குறித்தும், கால்நடை வளா்க்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த கால்நடை திருவிழா நடத்தப்படுகிறது என்றாா்.

வெற்றிபெற்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கு விலங்குகள் நல ஆா்வலா்கள் அறந்தாங்கி பாபு, கலை, செல்வராஜ், செல்வம் ஆகியோா் ரொக்கப் பரிசுகளுடன் சான்றிதழ்களை வழங்கினா்.