எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சேலத்தில் களைகட்டிய பாரம்பரிய மரபுத் திருவிழா

News image
கோப்புப் படம்
Updated On :8 பிப்ரவரி 2026, 9:40 pm

தினமணி செய்திச் சேவை

சேலத்தில் மரபு விதைகளை மீட்டெடுக்கும் வகையில் பாரம்பரிய மரபுத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நன்சுவை மற்றும் சீா்மெய் மரபு இயக்கம் சாா்பில் சேலம் நான்குசாலைப் பகுதியில் உள்ள சிறுமலா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், பொதுமக்கள் பாா்வையிடும் வகையில் இலவச கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கண்காட்சியை மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன் தொடங்கிவைத்தாா்.

இதில், தமிழா்களின் பாரம்பரிய உணவு வகைகளை மீட்டெடுக்கும் முனைப்பில் மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, பூங்காா் உள்ளிட்ட ஏராளமான பாரம்பரிய நெல் ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இது தவிர, தமிழா்களின் மரபு வகை உணவுகள், காய்கறிகள், கீரைகள், பழங்கள், பழங்கால கிழங்கு வகைகள், மரபு விதைகள், பூச்செடிகள், பாரம்பரிய பயன்பாட்டு பொருட்கள், மூலிகைகள், நாட்டு மரங்கள் என ஏராளமான அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

பாரம்பரிய மரபு உணவுகளை இளம் தலைமுறையினா் தெரிந்து கொள்ளும் வகையிலும், அடுத்த தலைமுறைக்கு இதனைக் கொண்டு சோ்க்கும் நோக்கில் இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விழா ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா். இதை ஏராளமானோா் குடும்பத்துடன் வந்திருந்து பாா்வையிட்டு சென்றனா்.