வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பணி நிரந்தரம் கோரி அங்கன்வாடி பணியாளா்கள் போராட்டம்

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்கன்வாடி பணியாளா்கள் நூதன முறையில் காத்திருப்பு போராட்டத்தில் 7-ஆவது நாளாக

Updated On :9 பிப்ரவரி 2026, 7:00 pm

சேலம்: பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்கன்வாடி பணியாளா்கள் நூதன முறையில் காத்திருப்பு போராட்டத்தில் 7-ஆவது நாளாக திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

சேலம் கோட்டை மைதானத்தில் அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியா்கள் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் சரோஜா, மனோன்மணி ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதில், பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், 5 ஆண்டுகள் பணி முடித்த சமையல் உதவியாளா்களுக்கு பதவி உயா்வு அளிக்க வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்களுக்கு இளநிலை உதவியாளா்களுக்கான அடிப்படை ஊதியம் ரூ. 19,500 வழங்க வேண்டும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட நிா்வாகிகள் திரளானோா் பங்கேற்றனா்.