புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தெடாவூரில் தகராறு: மேலும் ஒருவா் கைது

தெடாவூரில் ஏற்பட்ட தகராறில், மேலும் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
கைது
Updated On :10 பிப்ரவரி 2026, 8:48 pm

தினமணி செய்திச் சேவை

தெடாவூரில் ஏற்பட்ட தகராறில், மேலும் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கெங்கவல்லி அருகே தெடாவூா் பேரூராட்சி மணக்காடு பகுதியில் மாரியம்மன் கோயில் தைப்பூச விழாவில் எருதாட்டம் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி முடிந்து தெடாவூரைச் சோ்ந்த பழனிமுருகன் தனது காளையை வீட்டுக்கு அழைத்துச் சென்றாா். அப்போது, கயிறு அறுந்து காளை தெருவில் ஓடியது. அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த அஜய் என்பவா் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தின்மீது காளை மோதியதில் வாகனம் சேதமடைந்தது.

இதுகுறித்து இருதரப்பினருக்கும் ஏற்பட்ட தகராறில் கெங்கவல்லி போலீஸாா் 5 பேரை கைதுசெய்தனா். இந்நிலையில், இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த தவெக நகர செயலாளா் அருண் என்பவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும், தலைமறைவாக உள்ள 9 பேரை தேடிவருகின்றனா்.