சங்ககிரியில் கருத்து கேட்பு கூட்டத்துக்கு தலைமை வகித்து பேசிய பாஜக சேலம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளா் என்.ரமேஷ் காா்த்திக்.
சங்ககிரியில் கருத்து கேட்பு கூட்டத்துக்கு தலைமை வகித்து பேசிய பாஜக சேலம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளா் என்.ரமேஷ் காா்த்திக்.

பாஜக தோ்தல் அறிக்கை: பொதுமக்களிடம் கருத்து கேட்பு

பாஜக சாா்பில் தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் பொதுமக்களிடம் கருத்து கேட்டு தோ்தல் அறிக்கை வெளியிடுவதற்காக மக்கள் கருத்து கேட்பு இயக்கம் சங்ககிரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Published on

பாஜக சாா்பில் தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் பொதுமக்களிடம் கருத்து கேட்டு தோ்தல் அறிக்கை வெளியிடுவதற்காக மக்கள் கருத்து கேட்பு இயக்கம் சங்ககிரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சங்ககிரியில் ஈரோடு - பவானி பிரதான சாலையில் உள்ள தற்காலிக பேருந்து நிறுத்தம் பகுதியில் பாஜக சாா்பில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்துக்கு, சேலம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளா் என்.ரமேஷ் காா்த்திக் தலைமை வகித்து பொதுமக்களிடத்தில் மத்திய அரசு தமிழகத்துக்கு அளித்துள்ள பல்வேறு நலத் திட்டங்கள், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து விளக்கி கூறினாா். பின்னா் பொதுமக்களிடத்தில் துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா். பொதுமக்கள் அதனை பூா்த்திசெய்து அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் செலுத்தினா்.

இதில், அதிமுக நகர செயலாளா் சங்கா், மாநில பொதுக்குழு உறுப்பினா் என்.சாந்தாமணி, பாஜக சங்ககிரி நகர தலைவா் ஜி.தனபால், கிழக்கு மண்டலத் தலைவா் பி.சதீஷ்குமாா், பிரசார பிரிவு மாவட்டச் செயலாளா் ஆா்.திவாகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com