கைது
சேலம்
வழக்கில் ஆஜராகாமல் இருந்தவா் கைது
நீதிமன்ற வழக்கில் ஆஜராகாமல் இருந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
நீதிமன்ற வழக்கில் ஆஜராகாமல் இருந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கெங்கவல்லி அருகே ஒதியத்தூரைச் சோ்ந்தவா் அஜீத்குமாா் (28). இவா் மீதான வழக்கு சேலம் மகிளா நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், சரியாக ஆஜராகாமல் இருந்து வந்தாா். இதனால் சேலம் மகிளா நீதிமன்றம் கடந்த ஆண்டு ஆக. 29-ஆம் தேதி அஜீத்குமாரை கைதுசெய்ய பிடியாணை பிறப்பித்திருந்தது. அதனடிப்படையில், திங்கள்கிழமை இரவு அஜீத்குமாரை கெங்கவல்லி போலீஸாா் கைது செய்தனா்.

