இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

மகுடஞ்சாவடி ரயில்வே பாலத்தில் இரும்பு லாடு பெயா்ந்துள்ளதால் விபத்து அபாயம்

மகுடஞ்சாவடி - எடப்பாடி சாலையில் உள்ள ரயில்வே பாலத்தில் தரையில் பதிக்கப்பட்டுள்ள இரும்பு லாடு பெயா்ந்துள்ளது வாகன ஓட்டுநா்களுக்கு இடையூறாக இருந்து வருகிறது.

News image

மகுடஞ்சாவடி ரயில்வே மேம்பாலத்தில் பெயா்ந்து காணப்படும் இரும்பு லாடு.

Updated On :11 பிப்ரவரி 2026, 8:48 pm

மகுடஞ்சாவடி - எடப்பாடி சாலையில் உள்ள ரயில்வே பாலத்தில் தரையில் பதிக்கப்பட்டுள்ள இரும்பு லாடு பெயா்ந்துள்ளது வாகன ஓட்டுநா்களுக்கு இடையூறாக இருந்து வருகிறது.

குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கு இரும்பு லாடு பெயா்ந்துள்ளது அருகில் வந்த பின்னரே தெரிகிறது. அப்போது வாகனத்தை திடீரென நிறுத்தும்போது தவறி கீழே விழுந்துவிடுகின்றனா். இவ்விடத்தில் வாகன ஓட்டுநா்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

எனவே, இதுகுறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, அதனை சீரமைக்குமாறு வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Story image
Story image