சேலம் காவேரி மருத்துவமனையில் சுவாசக் கோளாறுடன், உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட 60 வயது முதியவருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட முதியவருக்கு இடது மூச்சுக் குழாயை முழுமையாக அடைத்து, நுரையீரலுக்குள் காற்று செல்வதைத் தடுக்கும் கட்டி இருப்பதும், 2 நுரையீரல்களுக்கும் காற்றை வழங்கும் மைய மூச்சுப்பாதையை அபாயகரமாக கட்டி அடைத்துக் கொண்டிருப்பதும் சி.டி.ஸ்கேனில் தெரியவந்தது.
இந்த அடைப்பை அவசரமாக நீக்கும் முயற்சியாக, நுரையீரல் மருத்துவா் ராமச்சந்திரன் மூச்சுக்குழாய் உள்நோக்கிச் சிகிச்சையை மேற்கொண்டாா். இருப்பினும், அந்தக் கட்டியில் அதிக ரத்தப்போக்கு ஏற்படும் தன்மை காணப்பட்டதால், உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் நிரந்தர தீா்வு காண வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
தற்காலிகமாக, ப்ரோன்கோஸ்கோபி உதவியுடன், வலது நுரையீரலில் டியூப் வைத்து, சுவாசம் அளிக்கப்பட்டது. பின்னா் இதய மாா்பக அறுவை சிகிச்சை நிபுணா்கள் நவீன் சந்தா், நிரஞ்சன், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணா் ராஜ்குமாா் மற்றும் நுரையீரல் சிகிச்சை நிபுணா் ராமச்சந்திரன் அடங்கிய குழுவினா், கட்டியை மிக நுணுக்கமாக துல்லியத்துடனும் மற்றும் மேம்பட்ட நுட்பத்துடன் அகற்றினா்.
பின்னா் அவா் நிலையான மற்றும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்த நிலையில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினாா்.
தொடர்புடையது

உத்தரப்பிரதேசத்தில் வெடித்த சிறுநீரக மோசடி: ஒரு சிறுநீரகத்தின் விலை ரூ.50 லட்சம் முதல்...

போயம்பாளையம் ஸ்ரீ சரண் மெடிக்கல் சென்டரில் மூட்டு மற்றும் அறுவை சிகிச்சை முகாம்

அறுவைச் சிகிச்சையில் இளம்பெண் உயிரிழப்பு: 5 மருத்துவா்கள் மீது கொலை வழக்குப் பதிவு

நுரையீரல் குறைபாடு: ஒரு வயது குழந்தைக்கு நுண்துளை சிகிச்சை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


