‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்.(கோப்புப் படம்)
சேலம்
இன்று கொண்டலாம்பட்டி மண்டலத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட கொண்டலாம்பட்டி மண்டலத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் சனிக்கிழமை (பிப். 14) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் தெரிவித்ததாவது:
சேலம் மாநகராட்சியில் மண்டலத்துக்கு ஒரு முகாம் வீதம் 4 இடங்களில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் முகாம் நடைபெற உள்ளது. இதில் கொண்டலாம்பட்டி மண்டலம், தாதகாப்பட்டி சஞ்சீவிராயன்பேட்டை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம் நடைபெறுகிறது.
இம்முகாமில் மாற்றுத்திறனாளிகள் பரிசோதிக்கப்பட்டு பாதிப்பு கண்டறியப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். மேலும், விரிவான முதல்வா் காப்பீடு திட்ட அட்டைக்கு விண்ணப்பிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளாா்.

