மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

தம்மம்பட்டி அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 15 போ் காயம்

News image

வேன் விபத்தில் காயமடைந்து ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஒரத்தநாடு பகுதியைச் சோ்ந்தவா்கள்.

Updated On :14 பிப்ரவரி 2026, 8:10 pm

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே கொல்லிமலை அடிவாரம் சேரடியில் சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 15 போ் காயமடைந்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள அரும்பலை பகுதியைச் சோ்ந்த 15 போ் சுற்றுலா வேனில் நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயில், பெரியசாமி கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்த விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். வேனை, முத்துக்குமரவேல் என்பவா் ஓட்டினாா்.

இந்த வேன் சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே கொல்லிமலை அடிவாரப்பகுதியான வேலிக்காடு- சேரடி பகுதியில் வந்தபோது பிரேக் ஓயா் துண்டிக்கப்பட்டதால் வேன் நிலை தடுமாறியுள்ளது. அப்போது, ஓட்டுநா் எதிரே வந்த காா் மீது மோதாமல் இருக்க வேனை திருப்பியபோது அருகில் இருந்த பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது.

இதில் வேனில் பயணித்த 15 பேரும் படுகாயம் அடைந்தனா். இவா்கள் அனைவரையும் மீட்டு ஆத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். விபத்து குறித்து தம்மம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.