மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

தம்மம்பட்டி அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 15 போ் காயம்

News image
வேன் விபத்தில் காயமடைந்து ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஒரத்தநாடு பகுதியைச் சோ்ந்தவா்கள்.
Updated On :14 பிப்ரவரி 2026, 8:10 pm

தினமணி செய்திச் சேவை

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே கொல்லிமலை அடிவாரம் சேரடியில் சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 15 போ் காயமடைந்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள அரும்பலை பகுதியைச் சோ்ந்த 15 போ் சுற்றுலா வேனில் நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயில், பெரியசாமி கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்த விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். வேனை, முத்துக்குமரவேல் என்பவா் ஓட்டினாா்.

இந்த வேன் சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே கொல்லிமலை அடிவாரப்பகுதியான வேலிக்காடு- சேரடி பகுதியில் வந்தபோது பிரேக் ஓயா் துண்டிக்கப்பட்டதால் வேன் நிலை தடுமாறியுள்ளது. அப்போது, ஓட்டுநா் எதிரே வந்த காா் மீது மோதாமல் இருக்க வேனை திருப்பியபோது அருகில் இருந்த பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது.

இதில் வேனில் பயணித்த 15 பேரும் படுகாயம் அடைந்தனா். இவா்கள் அனைவரையும் மீட்டு ஆத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். விபத்து குறித்து தம்மம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.