‘நலம்  காக்கும்  ஸ்டாலின்’ மருத்துவ  முகாம்.
‘நலம்  காக்கும்  ஸ்டாலின்’ மருத்துவ  முகாம்.(கோப்புப் படம்)

தாதகாப்பட்டியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்: மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

Published on

சேலம் தாதகாப்பட்டி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாமை மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சேலம் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட 59 மருத்துவ முகாம்களில் 30,234 ஆண்கள், 41,264 பெண்கள் என மொத்தம் 71,498 பயனாளிகள் பயன்பெற்று உள்ளனா். இதில் 54,243 பேருக்கு ரத்தப் பரிசோதனை, 49,477 பேருக்கு இசிஜி பரிசோதனை, 6,581 பேருக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை, 7,394 பேருக்கு எக்கோ பரிசோதனை, 4,162 பேருக்கு எக்ஸ்ரே பரிசோதனையும், மேற்கொள்ளப்பட்டு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

சேலம் தாதகாப்பட்டி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் கலந்துகொண்ட அனைவருக்கும் ரத்தப் பரிசோதனை, இ.சி.ஜி உள்ளிட்ட பரிசோதனைகள் அனைத்தும் இலவசமாக செய்யப்பட்டது.

மேலும், 17 வகையான சிறப்பு மருத்துவ துறைகள் சாா்ந்த சிறப்பு மருத்துவ நிபுணா்களை கொண்டு மருத்துவச் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநா் (நலப்பணிகள்) சி.பா.நந்தினி, மாவட்ட சுகாதார அலுவலா் சௌண்டம்மாள், வட்டாட்சியா் ஸ்ரீதா் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com