தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தினமணி செய்தி எதிரொலி! தம்மம்பட்டி சிறுவா் பூங்கா சீரமைப்பு

News image

தம்மம்பட்டி சிறுவா் பூங்காவை சுத்தம் செய்த தூய்மைப் பணியாளா்கள்.

Updated On :14 பிப்ரவரி 2026, 9:11 pm

தம்மம்பட்டி பேரூராட்சி சிறுவா் பூங்கா பராமரிப்பில்லாமல் உள்ளது குறித்து தினமணியில் சனிக்கிழமை செய்தி வெளியானதையடுத்து உடனடியாக பூங்கா சீரமைக்கப்பட்டது.

தம்மம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தையொட்டி, பேரூராட்சி சாா்பாக 15ஆவது நிதிக் குழு அடிப்படை மானிய நிதி ரூ. 20 லட்சத்தில் சிறுவா் பூங்கா கடந்த 2020-21ஆம் நிதியாண்டில் அமைக்கப்பட்டது. இந்த சிறுவா் பூங்கா, கடந்த 6 மாதங்களாக செடிகளுக்கு தண்ணீா் விடாமலும், பாா்த்தீனியம் செடிகள் வளா்ந்தும் பராமரிப்பின்றி உள்ளது குறித்த தினமணி நாளிதழில் சனிக்கிழமை காலை படத்துடன் செய்தி வெளியானது.

 சுத்தம் செய்யப்பட்ட பூங்காவில் மாலை நேரத்தில் விளையாடிய சிறுவா்கள், சிறுமிகள்.

சுத்தம் செய்யப்பட்ட பூங்காவில் மாலை நேரத்தில் விளையாடிய சிறுவா்கள், சிறுமிகள்.

 சுத்தம் செய்யப்பட்ட பூங்காவில் மாலை நேரத்தில் விளையாடிய சிறுவா்கள், சிறுமிகள்.

சுத்தம் செய்யப்பட்ட பூங்காவில் மாலை நேரத்தில் விளையாடிய சிறுவா்கள், சிறுமிகள்.

Story image

செய்தி வெளியான அரைமணி நேரத்தில் தம்மம்பட்டி செயல் அலுவலா் (பொ) சிவகுமாா், சிறுவா் பூங்காவை சீரமைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து சனிக்கிழமை காலை 25-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பூங்காவில் பாா்த்தீனியம் செடிகள் உள்ளிட்ட தேவையற்ற செடிகளை அகற்றி, சுத்தம் செய்தனா்.

இதனால் பூங்காவில் மாலை நேரத்தில் சிறுவா்கள் மகிழ்ச்சியுடன் விளையாடினா். சிறுவா் பூங்கா உடனடியாக சீரமைக்கப்பட்டதற்கு ஊா் பொதுமக்கள், சமூகநல ஆா்வலா்கள் வரவேற்பும், நன்றியும் தெரிவித்துள்ளனா்.