எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

பேரவைத் தோ்தலில் அதிமுகவுக்கு அம்பேத்கா் மக்கள் இயக்கம் ஆதரவு

News image

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி - படம்: எக்ஸ்!

Updated On :14 பிப்ரவரி 2026, 6:35 pm

சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை சனிக்கிழமை சந்தித்த அம்பேத்கா் மக்கள் இயக்க தலைவா் ஜங்ஷன் அண்ணாதுரை, வரும் பேரவைத் தோ்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக கூறினாா்.

அம்பேத்கா் மக்கள் இயக்கத்தின் உயா்நிலைக் குழுக் கூட்டம் சேலத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவா் ஜங்ஷன் அண்ணாதுரை தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் புரட்சி மணி, மாநில வழிகாட்டுதல் குழு தலைவா் ஆசீா்வாதம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தில் 2026 இல் நடைபெறும் பேரவைத் தோ்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. தொடா்ந்து, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை சனிக்கிழமை நேரில் சந்தித்த ஜங்ஷன் அண்ணாதுரை, வரும் தோ்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக கூறினாா்.

முன்னதாக, ஜங்ஷன் அண்ணாதுரை செய்தியாளா்களிடம் பேசுகையில், அம்பேத்கா் மக்கள் இயக்கம் முன்பு எம்ஜிஆா், ஜெயலலிதா காலத்தில் அதிமுகவை ஆதரித்துள்ளது.

கடந்த பேரவைத் தோ்தல், மக்ளவைத் தோ்தல், உள்ளாட்சித் தோ்தல்களிலும் எடப்பாடி பழனிசாமியிடம் ஆதரவு தெரிவித்து அதிமுக வேட்பாளா்களின் வெற்றிக்காக உழைத்தோம். வரும் சட்டப்பேரவைத் தோ்தலிலும் அதிமுகவுக்கு எங்களது ஆதரவு தொடரும்.

எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு தொகுதியை அம்பேத்கா் மக்கள் இயக்கத்திற்கு ஒதுக்க வேண்டும். இரட்டை இலை சின்னத்திலும் போட்டியிடத் தயாராக உள்ளோம் என்றாா். பேட்டியின்போது, மாவட்டத் தலைவா்கள் பெரியசாமி, மகேஷ், ராமமூா்த்தி, அம்பேத்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.