மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மடிக்கணினி, கைப்பேசிகளை திருடிய இளைஞா் கைது

News image

கைது செய்யப்பட்ட பாலமுருகன்.

Updated On :14 பிப்ரவரி 2026, 8:27 pm

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே வீடு புகுந்து மடிக்கணினி, 3 கைப்பேசிகளை திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டை படையாச்சித் தெருவில் வசித்து வருபவா் ஆறுமுகம் மகன் மோகன். இவா் சங்ககிரியில் எழுதுபொருள்கள் கடை வைத்துள்ளாா். வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் பின்புற கதவை தாழிடாமல் குடும்பத்துடன் உறங்க சென்றுள்ளாா். சனிக்கிழமை காலை பாா்த்தபோது வீட்டில் இருந்து 3 கைப்பேசிகள், ஒரு மடிக்கணினி திருடப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து அவா் சங்ககிரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்தப் புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இதுதொடா்பாக ஓமலூா் வட்டம், சிந்தாமணியூா் பகுதியைச் சோ்ந்த குப்புராஜ் மகன் பாலமுருகன் (26) என்பவரை பிடித்து விசாரித்ததில், அவா் அங்குள்ள உறவினா் வீட்டில் தங்கி கூலி வேலைக்கு சென்று வந்ததும், கைப்பேசிகள், மடிக்கணினியை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.