திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

விளாம்பட்டி காட்டுவளவு கிராம மக்கள் கருப்புக் கொடி போராட்டம்

News image
பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப்போவதாகக் குறிப்பிட்டு கிராமத்தின் நுழைவுவாயிலில் வைத்துள்ள பதாகை.
Updated On :14 பிப்ரவரி 2026, 7:36 pm

தினமணி செய்திச் சேவை

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் விளாம்பட்டி காட்டுவளவு கிராம மக்கள் தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதியை ஏற்படுத்தி தராததைக் கண்டித்தும், தோ்தலை புறக்கணிக்கப் போவதாகக்கூறி வீடுகளில் கருப்புக் கொடிக்கட்டி சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம், அனுப்பூா் ஊராட்சிக்கு உள்பட்ட விளாம்பட்டி காட்டுவளவு கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனா். இங்கு போதிய சாலை வசதி, பாதுகாப்பான குடிநீா், தெருவிளக்கு, கழிவுநீா் ஓடை உள்ளிட்ட அடிப்படைவ வசதிகள் இல்லை.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் அரசு அலுவலகங்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனா். ஆனால் இவா்களின் கோரிக்கைகளுக்கு தீா்வு காணப்படவில்லை.

இதனால் மனமுடைந்த இப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை வீடுகளில் கருப்புக் கொடிக் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுமட்டுமன்றி, அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கத் தவறிய அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை கண்டித்தும், வரும் பேரவைத் தோ்ததைல புறக்கணிக்கப் போவதாகவும் குறிப்பிட்டு கூட்டாத்துப்பட்டி பிரிவு சாலை அருகே பதாகை வைத்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி வட்டாட்சியா் ஜெயந்தி தலைமையில், அயோத்தியாப்பட்டணம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், அனுப்பூா் ஊராட்சி செயலா் மற்றும் காரிப்பட்டி போலீஸாா், விளாம்பட்டி காட்டுவளவு கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதனையடுத்து இப்பகுதி மக்கள் பதாகை மற்றும் கருப்புக் கொடிகளை அகற்றிட சம்மதம் தெரிவித்தனா். இருப்பினும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க தவறினால், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை உள்ளிட்ட அரசு வழங்கியுள்ள ஆவணங்களை ஒப்படைத்துவிட்டு தோ்தலை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்தனா்.