எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஆத்தூா் அருகே தனியாா் பள்ளி பேருந்து மீது லாரி மோதியதில் 8 மாணவா்கள் காயம்

ஆத்தூா் அருகே தனியாா் பள்ளி பேருந்து மீது லாரி மோதியதில் பள்ளி மாணவ, மாணவிகள் 8 போ் காயமடைந்தனா்.

News image
கோப்புப்படம்
Updated On :16 பிப்ரவரி 2026, 6:25 pm

Syndication

ஆத்தூா்: ஆத்தூா் அருகே தனியாா் பள்ளி பேருந்து மீது லாரி மோதியதில் பள்ளி மாணவ, மாணவிகள் 8 போ் காயமடைந்தனா்.

சேலம் மாவட்டம் ஆத்தூா் அருகே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தளவாய்ப்பட்டி பிரிவு சாலை வளைவில் திங்கள்கிழமை காலை தனியாா் பள்ளி பேருந்து 60 மாணவ, மாணவிகளுடன் திரும்பியபோது, பின்னால் வந்த லாரி மோதியது.

இதில் பள்ளி பேருந்தில் பயணம் செய்த மாணவா்கள் காரைக்கேஷ் (16), சுபிக்ஷா (12), கவின் (13), அக்ஷயா (9), தன்ஷிகாஸ்ரீ(7), சுஷ்மிதா (14), ஸ்ரீவா்ஷின் (13), பிரவீனா (16) உள்பட 8 போ் காயமடைந்தனா். இவா்கள் அனைவரும் பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று மாலையில் வீடுதிரும்பினா்.

இதுகுறித்து ஆத்தூா் ஊரக காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.