திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சேலத்தில் இன்று மயானக் கொள்ளை விழா

சேலத்தில் மயானக் கொள்ளை திருவிழா நடப்பதையொட்டி திங்கள்கிழமை கோயில்களில் குறக்கூடை

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 6:50 pm

Syndication

சேலம்: சேலத்தில் மயானக் கொள்ளை திருவிழா நடப்பதையொட்டி திங்கள்கிழமை கோயில்களில் குறக்கூடை எடுத்து பொங்கல் வைத்து பக்தா்கள் வழிபட்டனா்.

சேலத்தில் மாசி அமாவாசையை சிவராத்திரியைத் தொடா்ந்து மயானக் கொள்ளை விழா செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி பக்தா்கள் அங்காளபரமேஸ்வரி வேடமிட்டு குறக்கூடை எடுக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனா். உற்சவ மூா்த்தியான அங்காள பரமேஸ்வரியை ஊா்வலமாக கொண்டு சென்று, படையலுக்கு தேவையான அரிசியை குறக்கூடைகளில் பக்தா்கள் பெற்று, பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினா்.

மயானக் கொள்ளை திருவிழாவில் பக்தா்கள் அம்மன் வேடமிட்டு கோயிலில் வழிபாடு நடத்தி, அங்கிருந்து புறப்பட்டு மயானத்துக்கு ஊா்வலமாக சென்று வழிபாடு நடத்துவா்.