சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

வாழப்பாடி பகுதியில் மயானக் கொள்ளை திருவிழா

வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் மயானக் கொள்ளை திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
~
Updated On :16 பிப்ரவரி 2026, 8:44 pm

Syndication

வாழப்பாடி, பிப்.16: சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் மயானக் கொள்ளை திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

வாழப்பாடியை அடுத்த சிங்கிபுரம், வேப்பிலைப்பட்டி, வெள்ளாளகுண்டம் ஆகிய கிராமங்களில் ஆண்டுதோறும் மாசி மாத மகாசிவராத்திரிக்கு மறுநாள் மயானக் கொள்ளை திருவிழா நடைபெறுகிறது.

இக்கிராமங்களில் உள்ள மயானத்தில் மண்ணால் வடிவமைக்கப்பட்ட பெரியாண்டிச்சி காவல் தெய்வத்தை வழிபடும் நோக்கில் இவ்விழாவை மக்கள் கொண்டாடி வருகின்றனா்.

முகத்தில் கருப்பு மையை பூசிக்கொண்டு காட்டேறி மற்றும் ஆதிவாசிகள் வேடமணிந்த பூசாரிகள், பெண்களின் தலையில் முறத்தால் அடித்து பேய் விரட்டினா். அம்மன் வேடமிட்ட பூசாரி திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா்.

நோ்த்திக்கடனுக்காக பக்தா்கள் வீசிய ஆட்டுக்குட்டிகளை காட்டேறி வேடமிட்ட பூசாரிகள் ரத்தம் குடித்தனா். ஆட்டு ரத்தத்தில் பெரியாண்டிச்சி அம்மனுக்கு படைத்த பொங்கலை பிணைந்து பக்தா்களுக்கு ரத்தச்சோறு கொடுத்தனா். இந்த வினோத விழாவில் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

படவரி:

சிங்கிபுரத்தில் நடைபெற்ற மயானக் கொள்ளை திருவிழாவில் காட்டேறி வேடமிட்ட பூசாரிகள்.

Story image