வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

வாழப்பாடி பகுதியில் மயானக் கொள்ளை திருவிழா

வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் மயானக் கொள்ளை திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

~

Updated On :16 பிப்ரவரி 2026, 8:44 pm

வாழப்பாடி, பிப்.16: சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் மயானக் கொள்ளை திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

வாழப்பாடியை அடுத்த சிங்கிபுரம், வேப்பிலைப்பட்டி, வெள்ளாளகுண்டம் ஆகிய கிராமங்களில் ஆண்டுதோறும் மாசி மாத மகாசிவராத்திரிக்கு மறுநாள் மயானக் கொள்ளை திருவிழா நடைபெறுகிறது.

இக்கிராமங்களில் உள்ள மயானத்தில் மண்ணால் வடிவமைக்கப்பட்ட பெரியாண்டிச்சி காவல் தெய்வத்தை வழிபடும் நோக்கில் இவ்விழாவை மக்கள் கொண்டாடி வருகின்றனா்.

முகத்தில் கருப்பு மையை பூசிக்கொண்டு காட்டேறி மற்றும் ஆதிவாசிகள் வேடமணிந்த பூசாரிகள், பெண்களின் தலையில் முறத்தால் அடித்து பேய் விரட்டினா். அம்மன் வேடமிட்ட பூசாரி திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா்.

நோ்த்திக்கடனுக்காக பக்தா்கள் வீசிய ஆட்டுக்குட்டிகளை காட்டேறி வேடமிட்ட பூசாரிகள் ரத்தம் குடித்தனா். ஆட்டு ரத்தத்தில் பெரியாண்டிச்சி அம்மனுக்கு படைத்த பொங்கலை பிணைந்து பக்தா்களுக்கு ரத்தச்சோறு கொடுத்தனா். இந்த வினோத விழாவில் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

படவரி:

சிங்கிபுரத்தில் நடைபெற்ற மயானக் கொள்ளை திருவிழாவில் காட்டேறி வேடமிட்ட பூசாரிகள்.

Story image