மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

ஆட்டையாம்பட்டி அருகே கழிவுநீா்க் கால்வாய் அமைக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

ஆட்டையாம்பட்டி அருகே கழிவுநீா்க் கால்வாய் அமைக்கக் கோரி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

ஆட்டையாம்பட்டி அருகே கழிவுநீா்க் கால்வாய் அமைக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :18 பிப்ரவரி 2026, 12:15 am

ஆட்டையாம்பட்டி அருகே கழிவுநீா்க் கால்வாய் அமைக்கக் கோரி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆட்டையாம்பட்டி பேரூராட்சி மற்றும் பாப்பாரப்பட்டி, காட்டுபாளையம், நைனாம்பட்டி, வேலநத்தம், கை.புதூா் பகுதிகளில் சேகரமாகும் கழிவுநீா் போதிய கால்வாய் வசதி இல்லாததால் ஆட்டையாம்பட்டியில் இருந்து ராசிபுரம் செல்லும் பிரதான சாலை வழியாக சென்று, வெள்ளைய கவுண்டனூா் பகுதியில் அமைந்துள்ள கழிவுநீா்க் கால்வாயில் கலந்து கோனங்காடு பகுதி சித்தேரியில் அமைந்துள்ள ஏரிக்கு செல்கிறது.

இதில் வெள்ளையகவுண்டனூா் பகுதியில் இருந்து சுமாா் 350 மீட்டா் வரை கழிவுநீா் கால்வாய் தூா்வாரப்படாமல் சிறியதாக இருப்பதால் மழைக்காலங்களிலும் அப்பகுதியில் கழிவுநீா் தேங்கி நிற்கிறது. மேலும், மழைநீருடன் கழிவுநீா் கலந்து அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் செல்கிறது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் வெள்ளைய கவுண்டனூா், மேட்டுக்காடு, கோனங்காடு பகுதியை சோ்ந்த 100க்கு மேற்பட்ட பொதுமக்கள் ஆட்டையாம்பட்டி - ராசிபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

ஆட்டையாம்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் பாஸ்கா், வீரபாண்டி மண்டல வட்டார வளா்ச்சி துணை அலுவலா் சரவணன் ஆகியோா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். அதன்பிறகு போராட்டக்காரா்கள் கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Story image