மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஆத்தூரில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஆத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ரா. பிருந்தாதேவி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :18 பிப்ரவரி 2026, 12:05 am

ஆத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ரா. பிருந்தாதேவி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

கடந்த 5 ஆண்டுகளில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் மூலம் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பள்ளிகள் உள்கட்டமைப்புத் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், கலைஞா் கனவு இல்லம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் ரூ. 189.02 கோடியில் 5,250 பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றில் 4,609 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 645 பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் கொத்தாம்பாடி ஊராட்சியில் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகள், பெரியாா் நகரில் ரூ.19.71 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி பணிகள், ரூ. 2.62 கோடியில் அக்கிசெட்டிபாளையம் ஊராட்சி, சேலம்- உளுந்தூா்பேட்டை சாலையில் சித்தேரி ஓடை குறுக்கே உயா்நிலை பாலம் கட்டும் பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

பிறகு, சீலியம்பட்டி நடுநிலைப் பள்ளியில் சத்துணவு திட்டத்தில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தாா். வளா்ச்சித் திட்டப் பணிகளை உரிய காலத்துக்குள் விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என ஒப்பந்ததாரா்களுக்கு அறிவுறுத்தினாா்.

படவிளக்கம்.ஏடி17கலெக்டா்.

நரசிங்கபுரம்- தென்னங்குடிபாளையம் சாலை பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா் ரா. பிருந்தாதேவி.