எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

ஏரிகளுக்கு காவிரி உபரிநீா் வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

மகுடஞ்சாவடி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் மேட்டூா் அணையிலிருந்து வெளியேறும் காவிரி உபரிநீரை நிரப்ப வேண்டும் என விவசாயிகள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

மகுடஞ்சாவடி பிடிஓ அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

Updated On :18 பிப்ரவரி 2026, 12:14 am

மகுடஞ்சாவடி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் மேட்டூா் அணையிலிருந்து வெளியேறும் காவிரி உபரிநீரை நிரப்ப வேண்டும் என விவசாயிகள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மகுடஞ்சாவடி வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் காவிரி சரபங்கா உபரிநீா் விவசாயிகள் நலச் சங்க மாநிலத் தலைவா் வேலன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க நாமக்கல் மாவட்டத் தலைவா் பொன்னுசாமி, விவசாய நிா்வாகிகள் வழக்குரைஞா் செல்வக்குமாா், நித்தியா அருண், செல்வகுமாா் (எ) மணிகண்டன், கந்தசாமி, மகுடஞ்சாவடி மணிகண்டன் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.

மேட்டூா் அணையிலிருந்து வெளியேறும் உபரிநீா் ஏற்கெனவே 100 ஏரிகளில் நிரப்பும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் மகுடஞ்சாவடி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் உபரிநீரை நிரப்பும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் முழக்கங்களை எழுப்பினா். பிறகு, மகுடஞ்சாவடி வட்டார வளா்ச்சி அலுவலரை சந்தித்து மனு அளிக்க சென்றபோது அலுவலகத்தில் அலுவலா்கள் இல்லாததால் மேலாளரிடம் மனுவை அளித்தனா்.