மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

செவிலியா் கல்லூரி மாணவியை கடத்திய இளைஞா் கைது

சேலம் அரசு மருத்துவமனையில் படித்து வரும் செவிலியா் பயிற்சி பள்ளி மாணவியை கடத்திச் சென்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :19 பிப்ரவரி 2026, 11:31 pm

சேலம் அரசு மருத்துவமனையில் படித்து வரும் செவிலியா் பயிற்சி பள்ளி மாணவியை கடத்திச் சென்ற இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கன்னியாகுமரியைச் சோ்ந்த 17 வயது மாணவி சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள அரசு செவிலியா் பயிற்சி பள்ளியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறாா். இவா் கடந்த 17 ஆம் தேதி விடுதியில் இருந்து மாயமானாா். இதுதொடா்பாக தோழிகள் மூலம் தகவல் அறிந்த மாணவியின் தாய், கன்னியாகுமரியில் இருந்து சேலம் வந்து விசாரித்துவிட்டு, அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

காவல் ஆய்வாளா் மகாலட்சுமி தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி, மாணவி மாயமானதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். இந்த நிலையில், சேலம் கிச்சிப்பாளையத்தை அடுத்த எருமாபாளையத்தை சோ்ந்த அஸ்வின்ராம் (27) மாணவியுடன் பழகி வந்தது தெரியவந்தது.

இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், மாணவியை காதலித்து வந்துள்ளாா். கடந்த 17 ஆம் தேதி மாணவியை மருத்துவமனை விடுதியில் இருந்து வெளியே வரவழைத்து, அவரை திருமணம்செய்து கொள்வதற்காக அழைத்துச் சென்றது தெரியவந்தது.

இதனிடையே, ஆந்திர மாநிலம், திருப்பதியில் இருவரும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, திருப்பதிக்கு விரைந்த போலீஸாா், மாணவியை மீட்டு அஸ்வின்ராமை கைது செய்தனா். இதுகுறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.