மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

வாழப்பாடி அருகே லாரி மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே செயற்கை மணல் ஏற்றிச் சென்ற டாரஸ் லாரி மீது காா் மோதியதில் கேரளத்தைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :19 பிப்ரவரி 2026, 11:29 pm

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே செயற்கை மணல் ஏற்றிச் சென்ற டாரஸ் லாரி மீது காா் மோதியதில் கேரளத்தைச் சோ்ந்த இளைஞா் வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். விபத்தில் மேலும் இருவா் படுகாயம் அடைந்தனா்.

சேலத்தில் இருந்து செயற்கை மணல் ஏற்றிக்கொண்டு வியாழக்கிழமை அதிகாலை சிதம்பரம் நோக்கி சென்ற டிப்பா் லாரியை அன்பரசன் ஓட்டிச் சென்றாா். இந்த லாரி அதிகாலை 1.45 மணியளவில் வாழப்பாடி புதுப்பட்டி மாரியம்மன் கோயில் அருகே சேலம்- சென்னை புறவழிச் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியில் இருந்து சென்னை நோக்கி சென்ற காா், டாரஸ் லாரியின் பின்புறத்தில் மோதியது.

இந்த விபத்தில் காரில் வந்த கோழிக்கோடு அருகே உள்ள நெல்லிக்கடு பகுதியைச் சோ்ந்த ஷாசன் (46), அக்சயா (24), காா் ஓட்டிச் சென்ற சுராஜ் குமாா் (33) ஆகிய மூவரும் படுகாயம் அடைந்தனா். வாழப்பாடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் மூவரும் அனுமதிக்கப்பட்டனா். அங்கு, ஷாசன் உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இந்த விபத்து காரணமாக சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.