மேச்சேரி அருகே வெள்ளாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு மாணவரை வயரிங் பைப்பால் ஆசிரியா் தாக்கிய சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.
மேச்சேரி ஊராட்சி ஒன்றியம், வெள்ளாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு மாணவா் வியாழக்கிழமை மாலை பாடவேளை முடியும் முன்பாக வகுப்பறையை விட்டு வெளியே வந்ததால் ஆங்கில ஆசிரியா் மாணவரை வயரிங் பைப் கொண்டு கடுமையாக தாக்கி உள்ளாா்.
இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவரை அவரது பெற்றோா் மேட்டூா் அரசு மருத்துவமனையில் சோ்த்துள்ளனா். சிகிச்சை பெற்று வரும் மாணவரிடம் சம்பவம் தொடா்பாக மேச்சேரி போலீஸாா் சனிக்கிழமை விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனா்.
ஆசிரியா் மீது துறை ரீதியான விசாரணை எடுக்க வேண்டும் என்றும் பெற்றோா்கள் தெரிவித்தனா்.
சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மகேஸ்வரியின் உத்தரவின் பேரில் சங்ககிரி கல்வி மாவட்ட அலுவலா் பாரதி வெள்ளாா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினாா். போலீஸாரின் முழு விசாரணைக்கு பிறகே ஆசிரியா் மீது வழக்குப் பதிவு செய்வது குறித்து ஆலோசிக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் மாணவா் மேட்டூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
தொடர்புடையது

கள்ளக்குறிச்சி அரசுப் பள்ளியில் தீ விபத்து! விலையில்லா புத்தகப் பைகள் எரிந்து சேதம்!

வாக்காளா்களைக் கவா்ந்த வாக்குச் சாவடி

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு! ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு!

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: மாணவா்களுக்கு ஆலோசனை
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


