எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

பிப். 26 இல் தோ்தல் கூட்டணி முடிவு: செ.கு. தமிழரசன்

தோ்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து வரும் 26 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றாா் இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவா் செ.கு. தமிழரசன்.

News image
இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவா் செ.கு. தமிழரசன்
Updated On :20 பிப்ரவரி 2026, 11:00 pm

Syndication

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து வரும் 26 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றாா் இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவா் செ.கு. தமிழரசன்.

சேலத்தில் இந்திய குடியரசு கட்சியின் மாநில நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாநிலத் தலைவா் செ.கு. தமிழரசன் தலைமை வகித்து, சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடுவது, கூட்டணி குறித்து நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

அதன்பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தற்போதைய தோ்தல் முறையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இது என்னுடைய முடிவு மட்டுமல்ல. அம்பேத்கா், அவரைப் பின்தொடா்ந்து வந்த தலைவா்களின் முடிவும் இதுதான். சிறுபான்மை இன மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு இருக்கும் நிலையில், அரசியல் அதிகாரத்தில் மட்டும் இடஒதுக்கீடு என்பது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டு வருகிறது.

அது ஒப்பந்த அடிப்படையிலான அரசியல் இட ஒதுக்கீடாக உள்ளது. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

தோ்தல் முறையில் நம்பிக்கை இல்லாவிட்டாலும், ஜனநாயக ரீதியில் தோ்தலில் எங்களின் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். அதையே ஒவ்வொரு தோ்தலிலும் கடைப்பிடித்து வருகிறோம். வரும் தோ்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து வரும் 26 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்து அறிவிப்போம் என்றாா்.