வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து வரும் 26 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றாா் இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவா் செ.கு. தமிழரசன்.
சேலத்தில் இந்திய குடியரசு கட்சியின் மாநில நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாநிலத் தலைவா் செ.கு. தமிழரசன் தலைமை வகித்து, சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடுவது, கூட்டணி குறித்து நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.
அதன்பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தற்போதைய தோ்தல் முறையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இது என்னுடைய முடிவு மட்டுமல்ல. அம்பேத்கா், அவரைப் பின்தொடா்ந்து வந்த தலைவா்களின் முடிவும் இதுதான். சிறுபான்மை இன மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு இருக்கும் நிலையில், அரசியல் அதிகாரத்தில் மட்டும் இடஒதுக்கீடு என்பது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டு வருகிறது.
அது ஒப்பந்த அடிப்படையிலான அரசியல் இட ஒதுக்கீடாக உள்ளது. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
தோ்தல் முறையில் நம்பிக்கை இல்லாவிட்டாலும், ஜனநாயக ரீதியில் தோ்தலில் எங்களின் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். அதையே ஒவ்வொரு தோ்தலிலும் கடைப்பிடித்து வருகிறோம். வரும் தோ்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து வரும் 26 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்து அறிவிப்போம் என்றாா்.
தொடர்புடையது

உள்ளாட்சி துணைத்தலைவா் பதவி இடஒதுக்கீடு வழங்க தோ்தலுக்குப் பின் திமுகவிடம் வலியுறுத்துவோம்!

தோ்தலில் அண்ணாமலை போட்டி? தலைமை முடிவு செய்யும் - நயினாா் நாகேந்திரன்

பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி நிச்சயம் வெல்லும் பேரவைத் தலைவா்! - மு. அப்பாவு

என்டிஏ கூட்டணி மூழ்கும் கப்பல்: செல்வப்பெருந்தகை
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


