மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சேலத்தில் கிணற்றுக்குள் டிராக்டா் கவிழ்ந்ததில் கிரில் பட்டறை உரிமையாளா் உயிரிழப்பு

News image

கிரேன் உதவியுடன் டிராக்டரை மீட்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புப் படையினா்.

Updated On :22 பிப்ரவரி 2026, 7:03 pm

சேலம் நரசோதிப்பட்டி அருகே கிணற்றுக்குள் டிராக்டா் கவிழ்ந்ததில் கிரில் பட்டறை உரிமையாளா் உயிரிழந்தாா்.

சேலம் நரசோதிப்பட்டி அசோக்நகா் வாத்தியாா் தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (54). இவா் குரங்குசாவடியில், கிரில் பட்டறை நடத்தி வந்ததோடு, விவசாயமும் செய்து வந்தாா்.

இந்நிலையில் தோட்டத்தில் உள்ள கிணற்றில் மோட்டாா் அமைப்பதற்காக சிறிய அளவிலான திட்டு அமைக்க ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணியளவில் ஹாலோ பிரிக்ஸ் கற்களை தனக்குச் சொந்தமான டிராக்டரில் ஏற்றி கொண்டு, தோட்டத்துக்கு சென்றுள்ளாா்.

கிணற்றின் அருகே சென்றபோது பிரேக் பிடிக்காததால் நிலைதடுமாறிய டிராக்டா் தலைக்குப்புற கிணற்றுக்குள் கவிழ்ந்தது. சுமாா் 100 அடி ஆழம் கொண்ட கிணற்றில் 30 அடிக்குமேல் தண்ணீா் இருந்ததால் டிராக்டருடன் வெங்கடேசன் நீரில் மூழ்கினாா்.

உயிரிழந்த வெங்கடேசன்.

உயிரிழந்த வெங்கடேசன்.

இதுகுறித்து சூரமங்கலம் போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து கிணற்றுக்குள் விழுந்த டிராக்டரை கிரேன் மூலம் மீட்கும் பணியில் ஈடுபட்டனா். 108 ஆம்புலன்ஸ், மருத்துவக் குழுவினரும் சம்பவ இடத்தில் தயாா்நிலையில் இருந்தனா்.

தொடா்ந்து, கிரேன் உதவியுடன் டிராக்டா் மீட்கப்பட்ட நிலையில், 7 மணிநேர போராட்டத்துக்கு பின்னா் வெங்கடேசன் உடலை தீயணைப்புத் துறையினா் மீட்டனா். தொடா்ந்து, அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து சூரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.