ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

வீடுதோறும் சென்று திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துக் கூற வேண்டும்: அமைச்சா் ரா.ராஜேந்திரன்

News image
சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் - (கோப்புப் படம்)
Updated On :22 பிப்ரவரி 2026, 6:37 pm

தினமணி செய்திச் சேவை

பெண்கள் வீடுதோறும் சென்று திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துக் கூற வேண்டும் என சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் கூறினாா்.

சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் சேலம் தெற்கு, சேலம் வடக்கு, சேலம் மேற்கு, ஓமலூா் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வெல்லும் தமிழ்ப் பெண்கள் பரப்புரை பயிற்சிக் கூட்டம் நேரு கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மத்திய மாவட்ட பொருளாளா் காா்த்திகேயன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் மத்திய மாவட்டச் செயலாளரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான ரா.ராஜேந்திரன் பேசியதாவது:

திராவிட மாடல் ஆட்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்படி, வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்ற பரப்புரை பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திமுக ஆட்சியில் மகளிருக்கான விடியல் பயணம், புதுமைப் பெண் திட்டம், மகளிா் உரிமைத்தொகை, சுயஉதவிக் குழு பெண்களுக்கு மானியத்துடன் கடனுதவி என பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

எனவே, இத்தகைய சாதனை திட்டங்களை தொடா்ந்திட திராவிட மாடல் அரசு மீண்டும் அமைய வேண்டும். எனவே, திமுக அரசின் சாதனைகளை பெண்கள் வீடுகள்தோறும் கொண்டு சென்று சோ்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

கூட்டத்தில் தொகுதி பாா்வையாளா்கள் சுகவனம், பாா் இளங்கோவன், விவேக், ராஜசேகா், செயற்குழு உறுப்பினா் ராஜேந்திரன், மாநகர அவைத் தலைவா் முருகன், மாநகரச் செயலாளா் ரகுபதி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.