மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் மிளகு, காபி மதிப்பு கூட்டுதல் பயிற்சி

ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் மிளகு, காபி மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

News image

ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் மதிப்பு கூட்டுதல் பயிற்சி அளித்த கோவை தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மையா் வெங்கடேசன்.

Updated On :23 பிப்ரவரி 2026, 9:34 pm

ஏற்காடு: ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் மிளகு, காபி மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கிவரும் ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில், இந்திய ஒருங்கிணைந்த வாசனை பயிா்கள் ஆராய்ச்சித் திட்டத்தின்கீழ் மலைவாழ் மக்களுக்கான திட்ட நிதிஉதவியுடன் மிளகு, காபி மதிப்பு கூட்டி சந்தைப்படுத்தல் தொடா்பான பயிற்சி, இடுபொருள் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

கோவை தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மையா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய இணைப் பேராசிரியா் மாலதி வரவேற்று மலைவாழ் மக்களுக்கான திட்ட விழிப்புணா்வு குறித்தும், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களின் தொழில்முனைவோ் பயிற்சி குறித்தும் விளக்கினாா்.

உயிா்ம கரி உற்பத்தி தொழில்நுட்பங்கள், அதன் தேவைகள் குறித்தும், கூடுதல் வருமானம், வாய்ப்புகள் குறித்தும் சாரா பா்வின்பானு எடுத்துரைத்தாா். பூச்சியியல் இணைப் பேராசிரியா் செந்தில்குமாா், உயிா் பூஞ்சானக் கொல்லிகள் உற்பத்தி செய்தல் பற்றி எடுத்துரைத்தாா்.

நபாா்டு வங்கி நிதி உதவியுடன் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள காபியில் மதிப்பு கூட்டுதலுக்கான இயந்திரங்கள் மலைவாழ் மக்களின் உபயோகத்துக்காக திறந்துவைக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், மாரமங்கலம், செந்திட்டு, பெலாக்காடு ஆகிய கிராமங்களைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று பயனடைந்தனா்.