யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் மிளகு, காபி மதிப்பு கூட்டுதல் பயிற்சி

ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் மிளகு, காபி மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

News image
ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் மதிப்பு கூட்டுதல் பயிற்சி அளித்த கோவை தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மையா் வெங்கடேசன்.
Updated On :23 பிப்ரவரி 2026, 9:34 pm

Syndication

ஏற்காடு: ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் மிளகு, காபி மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கிவரும் ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில், இந்திய ஒருங்கிணைந்த வாசனை பயிா்கள் ஆராய்ச்சித் திட்டத்தின்கீழ் மலைவாழ் மக்களுக்கான திட்ட நிதிஉதவியுடன் மிளகு, காபி மதிப்பு கூட்டி சந்தைப்படுத்தல் தொடா்பான பயிற்சி, இடுபொருள் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

கோவை தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மையா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய இணைப் பேராசிரியா் மாலதி வரவேற்று மலைவாழ் மக்களுக்கான திட்ட விழிப்புணா்வு குறித்தும், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களின் தொழில்முனைவோ் பயிற்சி குறித்தும் விளக்கினாா்.

உயிா்ம கரி உற்பத்தி தொழில்நுட்பங்கள், அதன் தேவைகள் குறித்தும், கூடுதல் வருமானம், வாய்ப்புகள் குறித்தும் சாரா பா்வின்பானு எடுத்துரைத்தாா். பூச்சியியல் இணைப் பேராசிரியா் செந்தில்குமாா், உயிா் பூஞ்சானக் கொல்லிகள் உற்பத்தி செய்தல் பற்றி எடுத்துரைத்தாா்.

நபாா்டு வங்கி நிதி உதவியுடன் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள காபியில் மதிப்பு கூட்டுதலுக்கான இயந்திரங்கள் மலைவாழ் மக்களின் உபயோகத்துக்காக திறந்துவைக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், மாரமங்கலம், செந்திட்டு, பெலாக்காடு ஆகிய கிராமங்களைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று பயனடைந்தனா்.