தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மாரத்தான் போட்டி: விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி மாணவி சிறப்பிடம்

மாரத்தான் போட்டியில் சிறப்பிடம் பெற்ற விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

News image

மாரத்தான் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவியை பாராட்டி வாழ்த்து தெரிவித்த கல்லூரியின் முதன்மையா் செந்தில்குமாா்.

Updated On :23 பிப்ரவரி 2026, 9:50 pm

ஆட்டையாம்பட்டி: மாரத்தான் போட்டியில் சிறப்பிடம் பெற்ற விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மேரா யுவ பாரத் அமைப்பின் சேலம் சின்னபுதூரை சோ்ந்த சுவாமி விவேகானந்தா் இளைஞா் சங்கம் மற்றும் அக்ஷரா சிலம்பம் அகாதெமி இணைந்து குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் நாட்டின் இயற்கை வளங்களை பாதுகாத்தல் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில் மாரத்தான் நிகழ்வை அண்மையில் நடத்தின.

இதில், பல்வேறு கல்லூரி, பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியைச் சோ்ந்த மாணவி மாரத்தான் போட்டியில் பங்கேற்று முதலிடம் பெற்றாா்.

மேலும், பொதுமக்களுக்கான பல்வேறு விழிப்புணா்வை ஏற்படுத்தியதற்காகவும், சமூக சேவைக்கான ஈடுபாடு, பங்களிப்பையும் பாராட்டி கல்லூரிக்கு சேவை துறைக்கான உன்னத விருதும் வழங்கப்பட்டது.

முதலிடம் பெற்ற மாணவிக்கு கல்லூரியின் முதன்மையா் செந்தில்குமாா் திங்கள்கிழமை வாழ்த்தையும், பாராட்டையும் தெரிவித்தாா். விருது கிடைத்ததற்கு பங்களிப்பையும், வழிகாட்டுதலையும் வழங்கிய கல்லூரியின் முதன்மையா் செந்தில்குமாருக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தா் கணேசன் மற்றும் துணைத் தலைவா் அனுராதா கணேசன் மற்றும் பேராசிரியா்கள் உள்ளிட்டோா் வாழ்த்தையும், பாராட்டையும் தெரிவித்தனா்.