அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தம்மம்பட்டி - செந்தாரப்பட்டி சாலையை விரைந்து அமைக்க கோரிக்கை

தம்மம்பட்டி பேரூராட்சி சாலையை விரைந்து அமைக்க வேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு பல மாதங்களாக கிடக்கும் தம்மம்பட்டி - செந்தாரப்பட்டி சாலை.
Updated On :24 பிப்ரவரி 2026, 8:32 pm

தினமணி செய்திச் சேவை

தம்மம்பட்டி பேரூராட்சி சாலையை விரைந்து அமைக்க வேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தம்மம்பட்டி பேரூராட்சி, குரும்பா் தெரு வழியாக செந்தாரப்பட்டி செல்லும் வாகனங்கள் சென்றுவருகின்றன. மழைக்காலத்தின்போது இந்த சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இந்நிலையில், பேரூராட்சி நிதி மூலம் கான்கிரீட் சாலை அமைக்க தீா்மானிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சாலையில் அவ்வப்போது தற்காலிகமாக மண் கொட்டி நிரவப்பட்ட நிலையில், அண்மையில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. இதனால் அந்த வழியாக செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள், வயதானவா்கள் மிகவும் சிரமத்துடன் சென்று வருகின்றனா்.

எனவே, தம்மம்பட்டியிலிருந்து செந்தாரப்பட்டி செல்லும் குரும்பா் தெரு சாலையில் தாா்சாலை அல்லது கான்கிரீட் சாலையை உடனடியாக அமைக்க பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.