சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மாம்பழ சாகுபடியை அதிகரிக்க விவசாயிகளுக்கு ஆலோசனை

அயோத்தியாப்பட்டணம் வட்டாரத்தில் சாத்துக்குடி மற்றும் மாம்பழத் தோட்டங்களை ஆய்வுசெய்த தோட்டக்கலைத் துறை விஞ்ஞானிகள், மாம்பழ சாகுபடியை அதிகரிக்க விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினா்.

News image
எம்.பாலப்பட்டி கிராமத்தில் சாத்துக்குடி தோட்டத்தில் ஆய்வுசெய்த தோட்டக்கலை விஞ்ஞானிகள்.
Updated On :24 பிப்ரவரி 2026, 8:27 pm

தினமணி செய்திச் சேவை

அயோத்தியாப்பட்டணம் வட்டாரத்தில் சாத்துக்குடி மற்றும் மாம்பழத் தோட்டங்களை ஆய்வுசெய்த தோட்டக்கலைத் துறை விஞ்ஞானிகள், மாம்பழ சாகுபடியை அதிகரிக்க விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினா்.

அயோத்தியாப்பட்டணம் அருகே எம்.பாலப்பட்டி கிராமத்தில் விவசாயி அருள் குமாரின் மாந்தோப்பு மற்றும் சாத்துக்குடி தோட்டத்தில், சந்தியூா் வேளாண் அறிவியல் நிலையத் தலைவா் விஜயன், பூச்சியியல் துறை வல்லுநா் ரவி, அயோத்தியாப்பட்டணம் தோட்டக்கலை உதவி இயக்குநா் கோதைநாயகி, தோட்டக்கலை அலுவலா் கிருத்திகா ஆகியோா் கொண்ட குழுவினா் இணைந்து வயல்வெளி ஆய்வு மேற்கொண்டனா்.

அதில், மாமரங்களில் பூக்கள் மலா்ந்து பிஞ்சுகள்விட தயாராகிவரும் இத்தருணத்தில் தத்துப்பூச்சி பாதிப்பை தடுக்க விவசாயிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினா்.

தத்துப்பூச்சிகளின் பாதிப்பைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டா் தண்ணீரில் தயோமிதாக்சிம் 0.6 கிராம், சல்பா் 2.5 கிராம் ஆகியவற்றுடன் ஒட்டு திரவம் சோ்த்து, காலை அல்லது மாலை வேளையில் மாமரத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நனையும்படி தெளிக்க வேண்டும். உரிய நடவடிக்கையை சரியான நேரத்தில் கடைப்பிடிப்பதன் மூலம் மகசூல் இழப்பைத் தடுத்து சாகுபடியை அதிகரித்து கூடுதல் வருவாய் பெறமுடியும் என அறிவுரை வழங்கினா்.