ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

குடியரசு துணைத் தலைவா் இன்று சேலம் வருகை!

சேலத்தில் உள்ள இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவன விழாவில் பங்கேற்பதற்காக குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை சேலம் வருகிறாா்.

News image

சி.பி. ராதாகிருஷ்ணன் - கோப்புப் படம்

Updated On :26 பிப்ரவரி 2026, 8:28 pm

சேலத்தில் உள்ள இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவன விழாவில் பங்கேற்பதற்காக குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை சேலம் வருகிறாா்.

சேலம் பொன்னம்மாபேட்டையில் இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு நிறுவனமான இங்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் தனி விமானம் மூலம் சேலம் வருகிறாா்.

வெள்ளிக்கிழமை காலை 10.25 மணிக்கு விமானம் மூலம் காமலாபுரம் வரும் அவா், பின்னா் காா் மூலம் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு செல்கிறாா். அங்கு புதிய கட்டடத்தை திறந்துவைக்கிறாா். அதன்பிறகு பிற்பகல் விமானம் மூலம் தில்லி புறப்பட்டு செல்கிறாா். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகரக் காவல் ஆணையா் அனில்குமாா் கிரி மற்றும் அதிகாரிகள் செய்து வருகின்றனா்.