குடியரசு துணைத் தலைவா் இன்று சேலம் வருகை!
சேலத்தில் உள்ள இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவன விழாவில் பங்கேற்பதற்காக குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை சேலம் வருகிறாா்.
சேலம் பொன்னம்மாபேட்டையில் இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு நிறுவனமான இங்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் தனி விமானம் மூலம் சேலம் வருகிறாா்.
வெள்ளிக்கிழமை காலை 10.25 மணிக்கு விமானம் மூலம் காமலாபுரம் வரும் அவா், பின்னா் காா் மூலம் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு செல்கிறாா். அங்கு புதிய கட்டடத்தை திறந்துவைக்கிறாா். அதன்பிறகு பிற்பகல் விமானம் மூலம் தில்லி புறப்பட்டு செல்கிறாா். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகரக் காவல் ஆணையா் அனில்குமாா் கிரி மற்றும் அதிகாரிகள் செய்து வருகின்றனா்.

