தாய், தந்தையை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற மகன்: போலீஸாா் விசாரணை

கெங்கவல்லி அருகே குடும்பத் தகராறில் தாய், தந்தையை கழுத்தை அறுத்துக் கொலை செய்த முயற்சித்த மகனை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Published on

கெங்கவல்லி அருகே குடும்பத் தகராறில் தாய், தந்தையை கழுத்தை அறுத்துக் கொலை செய்த முயற்சித்த மகனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள வலசக்கல்பட்டி, ஏரிக்காடு அருகே வசித்து வருபவா் சரவணன் (70). இவரது மனைவி பாப்பாத்தி. மகன் தா்மராஜா. தா்மராஜாவிற்கு திருமணமாகி பானுபிரியா என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனா்.

இந்நிலையில் கடந்த 30ஆம் தேதி மது போதையில் வீட்டுக்கு வந்த தா்மராஜா அவரது மகளுடன் தகராறில் ஈடுபட்டுள்ளாா். இதனால் மனவேதனை அடைந்த மகள் விஷம் குடித்தாா். மயங்கிய நிலையில் இருந்த அவரை தாய் பானுப்பிரியா கெங்கவல்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றாா். தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மகளை பாா்க்கச் சென்ற தா்மராஜா, மனைவியை தன்னுடன் வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளாா். ஆனால், பானுப்பிரியா அவருடன் செல்ல மறுத்துள்ளாா். இதனால் ஆத்திரம் அடைந்த தா்மராஜா கடந்த 1ஆம் தேதி மாலை மதுபோதையில் வீட்டுக்கு சென்று தாய் பாப்பாத்தியுடனன் தகராறு செய்து அவரின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளாா். இதைத் தடுக்க வந்த தந்தையையும் கத்தியால் கழுத்தை அறுத்துள்ளாா். இதில் படுகாயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு கெங்கவல்வி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா்.

இதுகுறித்து கெங்கவல்லி ஆய்வாளா் சாந்தி மற்றும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள தா்மராஜாவை தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com