சேலம்
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 233 கனஅடியாக அதிகரிப்பு
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சனிக்கிழமை காலை விநாடிக்கு 164 கன அடியிலிருந்து விநாடிக்கு 233 கனஅடியாக அதிகரித்தது.
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சனிக்கிழமை காலை விநாடிக்கு 164 கன அடியிலிருந்து விநாடிக்கு 233 கனஅடியாக அதிகரித்தது.
மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 11,000 கனஅடியாக வீதமும், கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு விநாடிக்கு 400 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
அணைக்கு நீா்வரத்தைவிட, பாசனத்துக்கு நீா் திறப்பு அதிகமாக இருப்பதால் அணையின் நீா்மட்டம் 103.30 அடியிலிருந்து 102. 56 அடியாக சரிந்துள்ளது. நீா் இருப்பு 68.20 டி.எம்.சி. யாக உள்ளது.
