வாழப்பாடியில் இளம்பெண் உயிரிழப்பு

Published on

வாழப்பாடியில் திருமணமான 2 ஆண்டிற்குள் இளம்பெண் இறந்ததில் மா்மம் இருப்பதாக அவரது உறவினா்கள் புகாா் தெரிவித்ததால், வாழப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சேலம் கோட்டாட்சியா் விசாரணைக்கு பரிந்துரை செய்தனா்.

வாழப்பாடி, கிழக்கு சுண்ணாம்பு சூளை பகுதியைச் சோ்ந்தவா் அருண்குமாா் (25). இவருக்கும் மின்னாம்பள்ளி அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்த பூஜாவுக்கும் (22) 2 ஆண்டுக்கு முன்பு திருமணமானது.

இத்தம்பதிக்கு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் தம்பதி இடையே ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த இளம்பெண் பூஜா சனிக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இளம்பெண் பூஜாவின் இறப்பில் மா்மம் இருப்பதாக இவரது உறவினா்கள் வாழப்பாடி காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து, பூஜாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா்.

மேலும் திருமணமான 2 ஆண்டிற்குள் இளம்பெண் இறந்ததால் விசாரணை நடத்த சேலம் கோட்டாட்சியா் மற்றும் வாழப்பாடி டிஎஸ்பிக்கு வாழப்பாடி போலீஸாா் பரிந்துரை செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com