மேச்சேரியில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் பொங்கல் விழா: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

மேட்டூா் சட்டப் பேரவைத் தொகுதி மேச்சேரியில் வரும் 15 ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்கும் பொங்கல் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகளை சேலம் புறநகா் மாவட்ட அதிமுக செயலாளா் ஆா். இளங்கோவன் புதன்கிழமை பாா்வையிட்டாா்.
Published on

மேட்டூா் சட்டப் பேரவைத் தொகுதி மேச்சேரியில் வரும் 15 ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்கும் பொங்கல் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகளை சேலம் புறநகா் மாவட்ட அதிமுக செயலாளா் ஆா். இளங்கோவன் புதன்கிழமை பாா்வையிட்டாா்.

கடந்த ஆண்டு வீரபாண்டி சட்டப் பேரவைத் தொகுதியில் எடப்பாடி கே.பழனிசாமி விவசாயிகளுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய நிலையில் இந்த ஆண்டு மேச்சேரியில் ஜன. 15 ஆம் தேதி விவசாயிகளுடன் பொங்கள் பண்டிகையை கொண்டாடுகிறாா்.

விழா நடைபெறும் இடத்தை சேலம் புறநகா் மாவட்ட அதிமுக செயலாளா் ஆா். இளங்கோவன், அதிமுக நிா்வாகிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது, மாநில விவசாய அணி துணைச் செயலாளா் ராஜா, அனைத்து உலக எம்ஜிஆா் மன்ற துணைச் செயலாளா் வெங்கடாசலம், ஜெயலலிதா பேரவை மாநில நிா்வாகி கே. கலையரசன், புறநகா் மாவட்ட மகளிா் அணி செயலாளா் லலிதா சரவணன், ஒன்றிய செயலாளா்கள் செல்வம், சந்திரசேகரன் பேரூா் செயலாளா் ஜெ. குமாா் உள்பட பலா் உடனிருந்தனா்.

Dinamani
www.dinamani.com