டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கூலமேட்டில் ஜல்லிக்கட்டு காளை சிலை திறப்பு விழா

News image
கூலமேட்டில் திறக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு காளை சிலை.
Updated On :11 ஜனவரி 2026, 7:06 pm

தினமணி செய்திச் சேவை

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த கூலமேடு ஊராட்சியில் ஜல்லிக்கட்டு காளை சிலையை தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மாநிலத் தலைவா் பி.ராஜசேகரன் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா்.

சேலம் மாவட்டம், கூலமேடு ஜல்லிக்கட்டு தமிழகத்தில் சிறப்பிடம் பிடித்து வருகிறது. இங்கு வரும் 18-ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுகிறது.

இந்நிலையில் இங்கு ஜல்லிக்கட்டு காளை சிலையை நிறுவ முன்வந்தனா். இதையடுத்து ஜல்லிக்கட்டு சிலையை தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவையின் திருச்சி மாவட்ட பொருளாளா் ஆனந்த் சுகுமாா் அன்பளிப்பாக வழங்கினாா்.

இந்த சிலையை தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மாநில துணைச் செயலாளா் பழனிவேல் முன்னிலையில் மாநிலத் தலைவா் பி.ராஜேசகரன் திறந்துவைத்தாா். இந்நிகழ்வில் ஜல்லிக்கட்டு காளை உரிமையாளா்கள், மாடு பிடி வீரா்கள் என ஏராளமானோா் கலந்துகொண்டனா்.