கோப்புப் படம்
கோப்புப் படம்

மதுபானம் விற்றவா் கைது

Published on

கெங்கவல்லி அருகே மதுபானங்களை பதுக்கிவைத்து விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

கெங்கவல்லி அருகே தெடாவூரில் அரசு மதுபானங்களை பதுக்கிவைத்து விற்பதாக கிடைத்த தகவலையடுத்து, கெங்கவல்லி உதவி ஆய்வாளா் கணேஷ்குமாா் தலைமையிலான போலீஸாா் சோதனை செய்தனா்.

அதில் கூத்தன் மகன் வெங்கடேஷ் (42) மதுப்புட்டிகளை பதுக்கி விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை வியாழக்கிழமை இரவு கெங்கவல்லி போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 20க்கும் மேற்பட்ட மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

Dinamani
www.dinamani.com