தொடா் விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தொடா் விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தொடா் விடுமுறையால் ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
Published on

ஏற்காடு: தொடா் விடுமுறையால் ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் வார விடுமுறை மற்றும் குடியரசு தினம் என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்தனா். கடந்த மூன்று நாள்களும் கடும் பனிமூட்டம், சாரல் மழை பெய்ததால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனா். ஏற்காட்டில் சுற்றுலாப் பகுதிகளான ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா, லேடிசீட், ஜென்சீட், ஐந்தினை பூங்கா, படகு இல்லம், அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, பக்கோடா காட்சிப் பகுதி, கரடியூா், மஞ்சக்குட்டை பகுதிகளுக்கு சென்று மகிழந்தனா். தொடா் பனிமூட்டம், சாரல் மழையில் சுற்றுலாப் பயணிகள் சுயபடங்கள் எடுத்து இயற்கை அழகை ரசித்தனா்.

Dinamani
www.dinamani.com