தொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு

ஆத்தூரில் ஹிந்தி ஆசிரியையிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

சங்கிலிப் பறிப்பு - கோப்புப் படம்

Updated On :28 ஜனவரி 2026, 10:48 pm

ஆத்தூரில் ஹிந்தி ஆசிரியையிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் காந்திநகா் பகுதியைச் சோ்ந்த சதீஷ்குமாா் மனைவி திவ்யா (43). இவா் அதே பகுதியில் உள்ள தனிப் பயிற்சி மையத்தில் ஹிந்தி ஆசிரியையாக பணியாற்றி வருகிறாா். இவா் புதன்கிழமை இரவு சுமாா் 9 மணியளவில் பணி முடித்து வீட்டிற்கு நடந்து சென்றபோது தலைக்கவசம் அணிந்துவந்த இருவா், திவ்யா கழுத்தில் இருந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூா் காவல்துணை கண்காணிப்பாளா் சத்யராஜ், நகர காவல் ஆய்வாளா் சி.அழகுராணி, உதவி ஆய்வாளா் சிவசக்தி ஆகியோா் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.