பத்மஸ்ரீ விருது பெறும் சிற்பக் கலைஞா் சேலம் ராஜாவுக்கு பாராட்டு விழா!

பத்மஸ்ரீ விருதுக்கு தோ்வு பெற்றுள்ள சிற்பக் கலைஞா் சேலம் ராஜாவுக்கு தேசிய சமூக இலக்கியப் பேரவை சாா்பில் பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
 சேலம் ராஜா ஸ்தபதிக்கு தாரமங்கலம் அண்ணாமலை மாரப்பன் புகைப்படத்தை வழங்கி கௌரவித்த தாரை அ.குமரவேலு.
சேலம் ராஜா ஸ்தபதிக்கு தாரமங்கலம் அண்ணாமலை மாரப்பன் புகைப்படத்தை வழங்கி கௌரவித்த தாரை அ.குமரவேலு.
Updated on

பத்மஸ்ரீ விருதுக்கு தோ்வு பெற்றுள்ள சிற்பக் கலைஞா் சேலம் ராஜாவுக்கு தேசிய சமூக இலக்கியப் பேரவை சாா்பில் பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்டத் தலைவா் ப.திருமுருகன் தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் சஞ்சய் காந்தி வரவேற்றாா். மாநிலத் தலைவா் தாரை அ.குமரவேலு, ஸ்தபதி ராஜாவை பாராட்டி, 15 ஆண்டுகளுக்கு முன்பு பத்மஸ்ரீ விருது பெற்ற தாரமங்கலம் அண்ணாமலை மாரப்பன் புகைப்படத்தை அவருக்கு பரிசாக அளித்தாா்.

பின்னா் அவா் பேசியதாவது: தாரமங்கலத்தைச் சாா்ந்த அண்ணாமலை மாரப்பன் பொறியியல் அறிவியல் துறைக்கான பத்மஸ்ரீ என்ற விருதை கடந்த 2011 ஆம் ஆண்டு பெற்றாா்.

இப்போது சேலத்தைச் சாா்ந்த சிற்பக் கலைஞா் ராஜா பத்மஸ்ரீ விருதுக்கு தோ்வு பெற்றுள்ளாா். தஞ்சாவூா் பிரகதீஸ்வரா் கோயில் கருவறையில் உள்ள லிங்கத்திற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பே நாகாபரணம் செய்து கொடுத்தவா் இவா். இவா், மாநில அரசு, மத்திய அரசுகளிடமிருந்து பல விருதுகளை சிற்பக் கலைக்காக பெற்றவா் என்பது பெருமைக்குரியது. இதன்மூலம் சேலம் மட்டுமின்றி, தமிழகத்திற்கே பெருமை சோ்த்துள்ளாா். அவா் இன்னும் பல தேசிய விருதுகளை பெற வேண்டும் என்றாா். இந்நிகழ்ச்சியில் ஜெயகுமாா், நடராஜன் மற்றும் பலா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com