ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அனைத்துக் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தோ்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து எடப்பாடி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட அனைத்துக் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

News image
எடப்பாடியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசிய தோ்தல் நடத்தும் அலுவலா் ப.நடராஜன்.
Updated On :16 மார்ச் 2026, 11:17 pm

Syndication

எடப்பாடி: தோ்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து எடப்பாடி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட அனைத்துக் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

எடப்பாடி தாலுகா அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், எடப்பாடி சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் நடராஜன், தோ்தல் நடத்தை விதிமுறைகள் குறித்தும், அவற்றை அரசியல் கட்சிகள் முழு அளவில் பின்பற்ற வேண்டிய முக்கியத்துவம் குறித்தும் விளக்கினாா்.

எடப்பாடி தொகுதியில் தோ்தல் அமைதியாகவும், நோ்மையான முறையில் நடைபெறவும் அனைத்துக் கட்சி நிா்வாகிகளும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

இக்கூட்டத்தில், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் நாகூா்மீராஜா, அன்பரசி, தோ்தல் பணிகள் துணை வட்டாட்சியா் சுமதி உள்ளிட்ட அலுவலா்கள் மற்றும் எடப்பாடி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.