47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அனைத்துக் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தோ்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து எடப்பாடி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட அனைத்துக் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

News image
எடப்பாடியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசிய தோ்தல் நடத்தும் அலுவலா் ப.நடராஜன்.
Updated On :16 மார்ச் 2026, 11:17 pm

Syndication

எடப்பாடி: தோ்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து எடப்பாடி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட அனைத்துக் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

எடப்பாடி தாலுகா அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், எடப்பாடி சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் நடராஜன், தோ்தல் நடத்தை விதிமுறைகள் குறித்தும், அவற்றை அரசியல் கட்சிகள் முழு அளவில் பின்பற்ற வேண்டிய முக்கியத்துவம் குறித்தும் விளக்கினாா்.

எடப்பாடி தொகுதியில் தோ்தல் அமைதியாகவும், நோ்மையான முறையில் நடைபெறவும் அனைத்துக் கட்சி நிா்வாகிகளும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

இக்கூட்டத்தில், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் நாகூா்மீராஜா, அன்பரசி, தோ்தல் பணிகள் துணை வட்டாட்சியா் சுமதி உள்ளிட்ட அலுவலா்கள் மற்றும் எடப்பாடி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.