புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

கடும் வெயிலால் இலைகள் கருகும் வாழை மரக்கன்றுகள்

அரசிராமணி பகுதியில் கடும் வெயிலால் இலைகள் கருகிய நிலையில் உள்ள வாழை மரக்கன்றுகள்.

News image

அரசிராமணி பகுதியில் கடும் வெயிலால் இலைகள் கருகிய நிலையில் உள்ள வாழை மரக்கன்றுகள்.

Updated On :1 மே 2026, 6:35 pm

சங்ககிரி வட்டம், தேவூா் அருகே உள்ள அரசிராமணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரக்கன்றுகள் கடும் வெயிலால் இலைகள் கருகும் நிலையில் உள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

தேவூா் அருகே அரசிராமணி, குள்ளம்பட்டி, பாரதி நகா், மூலப்பாதை, தண்ணிதாசனூா், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கதலி, நேந்தரம், மொந்தவாழை, பூ வாழை உள்ளிட்ட ரகங்கள் கொண்ட வாழைக் கன்றுகளை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனனா். தற்போது அப்பகுதியில் வெயில் அதிகரித்து வருவதால், வாழைக் கன்றுகளின் இலைகள் கருகி பழுப்பு நிறத்துக்கு மாறி உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து, கோடை மழையை எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா்.